திங்கள், 22 அக்டோபர், 2012

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள்:ரஷ்யாவில் போராளி குழுக்களை சேர்ந்த 49 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை :


மாஸ்கோ:ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற்பாடாக, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் கொலை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், 49 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.ரஷ்யாவில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வடக்கு காகசஸ், செசன்யா உள்ளிட்ட மாகாணங்களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று இந்த துப்பாக்கி சூடு அடைபெற்று வருகிறது.பயங்கரவாதிகள் வரும் 2014ம் ஆண்டு நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியையும் குலைக்க சதி திட்டம் தீட்டியுள்ளதாக, ரஷ்ய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபரான புடின், முன்னாள் புலனாய்வு தலைவர் என்ற முறையில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.ரஷ்ய பாதுகாப்பு படையினர், வடக்கு காகசஸ் பகுதியில், நேற்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் போராளி அமைப்பின், ஒன்பது தலைவர்கள் உள்பட, 49 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக