வியாழன், 25 அக்டோபர், 2012

வளைகுடா நாடுகளில் இன்று ஹஜ்ஜு பெருநாள் :


துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர். இது போல் மலைகுடா நாடுகளான சவூதி அரேபியா , ஓமன், பஹரின் உள்ளிட்ட நாடுகளிலும், சில ஆப்ரிக்க நாடுகளிலும் , இந்தியாவில் கேரளாவில் சில பகுதிகளிலும், தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களிலும் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையும், பண்டிகை கொண்டாட்டங்களும் நடை பெற்றன. பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நாளை பெருநாள் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக