திங்கள், 22 அக்டோபர், 2012

மெக்கா நகர விடுதியில் தீ விபத்து:இந்தியர் உட்பட 13 பேர் காயம்


ஜெட்டா:சவுதியில், இந்திய ஹஜ் பயணிகள் தங்கியிருந்த விடுதியில், தீ விபத்து ஏற்பட்டதில், 13 பேர் காயமடைந்தனர்.பக்ரீத்தையொட்டி, சவுதியில் உள்ள, மெக்கா மற்றும் மதினாவுக்கு, 20 லட்சம் யாத்திரிகர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, மருத்துவ வசதிக்கு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மெக்கா நகரில், இந்தியர், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, 179 யாத்திரிகர்கள் அந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், 13 பேர் இந்த விபத்தில் லேசான காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக