லாகூர் :பாகிஸ்தானை சேர்ந்த பெண், மருத்துவ செலவுக்காக, தனது ஒரே மகனை விற்று விட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் கலீதா பீவி. இவர் இதயம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், தனது ஒரே மகனான, ஏழுமாதமான பைசனை விற்றுவிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த, முகமது சவுகத் என்பவர் இந்த குழந்தையை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, கலீதாவும், சவுகத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக