சனி, 20 அக்டோபர், 2012

தாலிபான்களால் சுடப்பட்ட மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் :


தாலிபான்களை தேவையில்லாமல் விமர்சனம் செய்து அவர்களால் தலையில் சுடப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி மலால யுசுப்சை உடல்நலம் தேறி வருவதாக அவரை மருத்துவம் செய்து வரும் மருத்துவர். டேவிட் ரோச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் 15 வயதான மலாலா தெளிவாக பேசுவதாகவும் , எழுதுவதாகவும் , ஆள் உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலாலா இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவியான மலாலா பத்துநாட்களுக்கு முன்பு தனது சகதோழிகள் இருவருடன் பள்ளிக்கு செல்லும் வழியில் தாலிபான்களால் சுடப் பட்டார். தலையில் பாய்ந்த குண்டை பாகிஸ்தான் மருத்துவமனியில் வைத்து அகற்றிய பிறகு உடனடியாக விமானம் மூலம் இங்கிலாந்து கொண்டு செல்லப் பட்டார். கியீன் எலிசபெத் மருத்துவமனை ப்ரிமின்கேம் அறகட்டளை மலாலாவின் மருத்துவ செலவை ஏற்று செலவளித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக