செவ்வாய், 30 அக்டோபர், 2012

ரஷ்யா: மர்ம நபர்கள் சுட்டு பள்ளிவாசல் இமாம் உள்பட 3 பேர் பலி!


மாஸ்கோ
:ரஷ்யாவின் காகஸஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தானில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் பள்ளிவாசல் இமாமும், இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை தொழுகைக்கு செல்லும் வழியில் இமாம் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காஸ்பியன் கடலோர நகரமான டெர்பெண்டில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து இமாமும், அவரது உதவியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலீமுல்லாஹ் இப்ராஹீமோவ் என்ற 49 வயதான இமாம் அப்பகுதியில் சமாதான முயற்சிகளுக்கு தலைமை வகித்தவர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இப்பகுதியில் 3 இமாம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய அதிகாரிகளின் கொடூர சித்திரவதைகளுக்கு பலியாகும் செச்னியாவுக்கு அருகிலுள்ள தாஜஸ்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக