வியாழன், 18 அக்டோபர், 2012

நியூயார்க் மீது தாக்குதல் நடத்த முயன்ற வங்கதேச இளைஞர் கைது


நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு இஸ்லாமிய இளைஞர் கைதானார். இது தொடர்பாக புலனாய்வு பிரிவு போலீசார் விசாரண‌ை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசா பெற்று கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் , நியூயார்‌க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களை கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் எப்.பி.ஐ. போலீசார் நபீ‌‌ஸை இன்று கைது செய்தனர். தற்போது புரூக்ளின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் நியூயார்க் நகரில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று அமெரிக்க மீடியாக்களும், அதனை அப்படியே வாந்தி எடுக்கும் இந்திய மீடியாக்களும் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையான நிலவரம் வெளிவருமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக