செவ்வாய், 16 அக்டோபர், 2012

திருவாரூரில் முண்டாசு கட்டி ம.ம.க போராட்டம்


தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னடர்களை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டத்தின் மையப்பகுதியான திருவாரூரில் இன்று 16-10-2012 காலை 10.30 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு முண்டாசு கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலைவர் கே.ஹெச்.நூர்தீன் அவர்கள் தலைமையில் பழைய இரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திருவாரூரின் முக்கிய பகுதிகளின் வழியாக கன்னடர்களை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டே புதிய இரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். புதிய இரயில் நிலையத்தை அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் தமுமுக ம.ம.க மாநில தலைவர் ஜே.எஸ்.ஆர். ரிபாயி ரஷாதி , ம.ம.க மாநில பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி , ம.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணப்பாண்டியன் , ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா , தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை வழிநடத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.
இறுதியாக ம.ம.க மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் நன்றி கூறினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியினர் உள்பட மாவட்ட முழுவதிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக