புதன், 31 அக்டோபர், 2012

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்


மணிலா :பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் மணிலாவில், கட்டடங்கள் குலுங்கின. பிலிப்பைன்சில், தலைநகர் மணிலாவிலிருந்து, 50 கி.மீ.,தொலைவில் உள்ள, புலாகன் மாகாணத்தில், நேற்று, 3.8 ரிக்டர் அளவுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மணிலா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். எனினும், இந்த நிலஅதிர்வுக்கு பிறகு, நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை. பெரிய அளவு சேதங்களும் காணப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக