செவ்வாய், 16 அக்டோபர், 2012

பிலிப்பைன்சில் அரசுக்கும் , முஸ்லிம் போராளி குழுவுக்கும் இடையே ஒப்பந்தம் :


பிலிப்பைன்சில் தெற்குப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தனிநாடு கேட்டு நாற்பது வருடங்களாக போராடி வருகின்றனர். பிலிப்பின்ஸ் அதிபர் பெநிகுயனோ அகுயனோ மற்றும் இஸ்லாமிய விடுதலை முன்னணி தலைவர் இப்ராஹீம் முராத் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் அரை நூற்றாண்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . ஒப்பந்தத்தில் எந்தெந்த பகுதிகள் சுயாட்சி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமைதி ஓசை என்று பிலிப்பின்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக