பஹ்ரைனில் பிரபலமான மனித உரிமை போராளி முஹம்மது அல் மஸ்கட்டி கடந்த செவ்வாய் கிழமை அனுமதியில்லாமல் பனாமா ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார் . பகரினில் மன்னராட்சிக்கு எதிராக கடந்த 2011 பிப்ரவரி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 80 க்கும் மேற்பட்ட போராளிகள் தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். பஹ்ரைன் நாட்டை நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. அவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக